சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் சர்வீச் சாலையில் குடும்பத்துடன் வசித்து வருபவர் உசேன்பாஷா(42), இவர் தனது ஓட்டு வீட்டில் செல் அரிப்பு இருப்பதால் அதனை அழிக்க பெயிண்டில் கலக்கும் ஆயில் ஒன்றை ஊற்றி கொளுத்தியுள்ளார்.

இதனால் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது இதில் உசேன்பாஷா(42), அவரது மனைவி ஆயிஷா(35), மகள் பாத்திமா(15), என மூவருக்கும் காயம் ஏற்பட்டது.
பாத்திமாவிற்கு கை, கால், மார்பு என அதிக காயம் ஏற்பட்டுள்ளது, உசேனுக்கு காலில் காயம், ஆயிஷாவிற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
முதலுதவி சிகிச்சை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு கே.எம்.சி.கொண்டு செல்ல உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.