விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது-விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மதுரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி...
மதுரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,,
இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களிடம் அரசு நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது
அதன்படி 130 நிறுவனங்கள் ஆன் லைனில் விண்ணப்பித்திருந்தது அவற்றின் 25 நிறுவனங்களுடன் கொள்முதல் அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
புதிய கண்டுபிடிப்புகளையும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக நிறுவனத்தின் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட உள்ளது
குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது
நகை கடன் தள்ளுபடி, 4 ஆயிரம் ரூபாய் கடன் நிவாரண உதவி வழங்கியது போன்று தகுதியுடைய நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரித்து வருகிறோம்
எவ்வளவு விரைவில் ஊக்க தொகை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் நிதி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
M.ராமலிங்கம் மதுரை