மதுரை ஜூலை 28, ஆடி அமாவாசை நாளில் நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்மாக உள்ள நிலையில் மதுரை வைகைஆற்றில் இன்று அதிகாலை முதலே ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வருகின்றனர்.

இதேபோன்று மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது.
இந்த தருணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது.
முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பார்கள்.
இந்த நிலையில், ஆடி அமாவாசை தினமான இன்று நீர்நிலை மற்றும் பல்வேறு கோயில்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.