நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் ரயில் பாதையின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கு.
ரயில்வே நிர்வாகத்தினர் எடுக்க வேண்டிய முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

நாகர்கோவிலை சேர்த்த அந்தோணி முத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், “நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் ரயில் பாதையின் குறுக்கே பேயன்குழி கிராமத்தில் இருந்து நுள்ளிவிளை கிராம ஊராட்சி சாலையை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக கள நிலவரத்தை ஆய்வு செய்து ரயில்வே நிர்வாகத்தினர் எடுக்க வேண்டிய முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.