மதுரையில் ஆணிப்படுக்கையில் படுத்தவாறு ஒரு நிமிடத்தில் 18 கான்கீரிட் கற்களை உடலில் வைத்து உடைத்து மதுரையை சேர்ந்த பொறியாளர் கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளார்.

டேக்வாண்டோவில் 26 கின்னஸ் சாதனை செய்தவர் மதுரையை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் விஜய் நாராயணன்.
மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் விஜய் நாராயணன் டேக்வோண்டோ மீதான ஈடுபாட்டால் தனது 23 வயதிலிருந்து தொடர்ந்து டேக்வாண்டோ கற்கத் தொடங்கியதோடு, டேக்வாண்டாவில் பல்வேறு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
இதுவரையிலும் கடந்த சில ஆண்டுகளில் டேக்வாண்டோவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் இதுவரை 26 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
குறிப்பாக 30வினாடிகளில் 11 கான்கிரீட் கற்களைத் தனது ஜம்பிங் பேக் கிக் என்ற முறையில் கால்களைப் பயன்படுத்தி உடைப்பது, ஒரு நிமிடத்தில் 37 கான்கீரிட் கற்களை காலால் உடைப்பது, கைகளில் அதிக எடையை தூக்கி பஞ்ச் செய்வது என பல்வேறு கின்னஸ் சாதனைகளை செய்துள்ளார்.
இந்நிலையில் ஆணிப்படுக்கையில் படுத்தபடி உடலுக்கு மேற்புறமும் ஆணிபடுக்கையை வைத்துக்கொண்டு தன் மேல் ஒரு நிமிடத்தில் 18 கான்கிரீட் கற்களை உடைக்கும் கின்னஸ் சாதனையை முயற்சியை நாராயணன் மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே ஒரு நிமிடத்தில் ஆணிப்படுக்கையில் படுத்தவாறு வெறும் 8 கான்கீரிட் கற்களை உடைத்த சாதனையை முறியடிக்கும் வகையில் விஜய் நாராயணன் இந்த கின்னஸ் சாதனையை முயற்சியை மேற்கொண்டுள்ளார். விரைவில் இந்த முயற்சியை கின்னஸ் அமைப்பு அங்கரிக்க உள்ளது.
உடலுக்கு கீழும் மேலும் ஆணியால் ஆன படுக்கையில் படுத்தபடி அதிக கனமான கான்கீரிட் கற்களை உடலில் வைத்து உடைத்து அவர் செய்த கின்னஸ் சாதனை முயற்சிக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.