முன்னாள் பிரதமர் மஹிந்த 16 நபர்களுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை கொழும்பில் அமைதியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை BAR சங்கம் (BASL) ஆதரவுடன் சட்டமா அதிபர் சார்பில் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் விளைவாக கோட்டை நீதவான் இந்த பயணத்தடையை பிறப்பித்துள்ளார்.

இலங்கை முழுவதும் பரவலான அமைதியின்மையை ஏற்படுத்திய அலரிமாளிகைக்கு அருகாமையிலும், கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது SLPP விசுவாசிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பிலேயே இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அஹ்மத் அஸ்ஜத்