அனகாபுத்தூர் முன்னாள் நகர மன்ற தலைவர் அனகை வேலாயுதம் அவர்களின் 60வது பிறந்த நாள் விழா அனகை ஜெய்பிரதஸ் சார்பில் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் சாமுண்டிஸ்வரி நகர் பகுதியில் அனகை ஜெய்பிரதர்ஸ் சார்பில் ஜெய்கணேஷ் அவர்களின் தலைமையில் முன்னாள் அனகபுத்தூர் நகர மன்ற தலைவரும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அம்மா பேரவை தலைவருமான அனகை B.வேலாயுதம் அவர்களின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடுதல், ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு அன்னதானம் , விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.
இந்த விடியோவை பாருங்க : ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியை நாகையில் கூட்டணி கட்சியான திமுகவினர் வெடி வெடித்து கொண்டாடினார்

இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள், சமூக அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வேலாயுதம் அவர்களுக்கு பிறந்த நாள் கேக் வெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதையும் படிங்க : கீழ்வேளூர் 4வது வார்டில் தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு 300 பயனாளிகளுக்கு தென்னங்கன்று