குத்தாலம் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் முருங்கை தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஐசிஐசிஐ பவுண்டேஷன் நிறுவனத்தில் சிஎஸ்ஆர் நிதி திட்டத்தின் கீழ் முருங்கை தோட்டம் அமைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அமராவதிராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், மாவட்ட வள பயிற்றுநர் நிறுவன மேம்பாட்டு பாலமுருகன்,விவசாயம் nபாலசுப்ரமணியன், குத்தாலம் ஒன்றிய மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் வளர்ச்சி அலுவலர் உஷா திட்ட விளக்கவுரையாற்றி முருங்கை தோட்டம் அமைப்பதன் குறிக்கோள்கள் குறித்தும், முருங்கை சாகுபடியின் மூலம் கிடைக்கக்கூடிய வருமானங்கள் குறித்தும், இத்தோட்டத்தினை மகளிர் குழுவினர் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதனை குறித்து விளக்கி கூறினார்.
இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கிருத்திகா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் மனுநீதி சோழன், விஏஓ சாமிநாதன் மற்றும் ஐசிஐசிஐ பவுண்டேஷன் சிவானந்தம் உள்ளிட்ட நிறுவன களப்பணியாளர்கள், கொத்தங்குடி ஊராட்சி தூய்மை பணியாளர்கள்,பணிதல பொறுப்பாளர்கள்,துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.