Homeலைஃப்ஸ்டைல்அழகு குறிப்புகள்சருமப் பொலிவையும் அழகாகவும் அதிகரிக்கும் ஹோம்மேட் ரோஸ் க்ரீம் தயார் செய்வது எப்படி ?...

சருமப் பொலிவையும் அழகாகவும் அதிகரிக்கும் ஹோம்மேட் ரோஸ் க்ரீம் தயார் செய்வது எப்படி ? | Homemade Skin Whitening Rose Cream

Date:

Homemade Skin Whitening Rose Cream: பல கிரிம்கள் சரும அழகை மேம்படுத்த கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் கலக்கும் கெமிக்கல் அனைத்தும் செயற்கையாக தயாரித்து சேர்க்கப்படுகிறது. அதனால், நன்றாக உள்ள சருமம் மோசமாகிவிடுகிறது. எனவே, இதை தடுக்க இயற்கையான ஸ்கின் வைட்னிங் கிரீமை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம்.

இயற்கையான பொருட்களை கொண்டு முழுக்க முழுக்க வீட்டிலேயே தயாரிப்பதால் எவ்விதத்திலும் பக்கவிளைவுகள் ஏற்படாது.

இதனை உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தடவிக்கொள்ளலாம். உடலில் இருக்கும் கருமையை ஒரே வாரத்தில் நீக்கி சருமத்தினை ஜொலிக்க வைக்கும். அதை பார்த்து நீங்கள் ஆச்சரியப்பட்டுபோவீர்கள். சரி, இதை தயாரிக்க பயன்பட போகும் பொருட்களும் எப்படி தயார் செய்வது என்பதை பார்ப்போமா!

பயன்படுத்தப்போகும் போகும் பொருட்கள் :

ரோஸ் வாட்டர் :2
பன்னீர் ரோஸ் :3பூக்கள்
கிளிசரின் :1ஸ்பூன்
கற்றாழை ஜெல் :1ஸ்பூன்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் :2

ரோஸ் க்ரீமினை வீட்டில் தயாரிப்பது எப்படி ?

  • முதலில் பன்னீர் ரோசாவை பிரித்தெடுத்து அதனை மிக்சியில்போட்டு கொஞ்சம் மைய அரைத்துக்கொள்ளவும்.
  • பின்னர் அதில் 2ஸ்பூன் அளவு ரோஸ் வாட்டர் ஊற்றி மீண்டும் அரைத்து கொள்ளவும், அரைத்த விழுதை ஒரு வெள்ளை துணியில் கொட்டி நன்றாக பிழிந்து சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • பின்பு அதில் பாதம் எண்ணெய், கற்றாழை ஜெல், கிளிசரின் மற்றும் 2 வைட்டமின் ஈ கேப்ஸுலில் இருக்கும் ஜெல் ஆகியவற்றை சேர்த்து ஒரு ஸ்பூனை கொண்டு நன்றாக கலக்கவும்.

இவ்வாறு கலக்கும்போது ஜெல் ரோஸ் கலரில் வரும், இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைத்துகொள்ளுங்கள். இப்போது ரோஸ் கிரீம் தயார் .

இதனை பயன்படுத்தும் முறை ?

தினந்தோரும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு முகத்தினை நன்றாக கழுவிக்கொண்டு நாம் தயாரித்துள்ள கிரீமை பூசி கொள்ளவேண்டும். அடர்த்திஇல்லாமல் பூசிக்கொள்ளவும். அதாவது கிரீமை விரலால் தொட்டு முகத்தில் ஆங்காங்கே புள்ளிகள் வைத்து அப்படியே தடவ வேண்டும்.

இவ்வாறு செய்வதால் முகமானது கிரீமை அப்படியே உறிஞ்சி கொள்ளும் அதன் பிறகு தூங்க செல்லலாம். தேவையானால் காலை ,மாலை இரண்டு வேளையும் பூசி கொள்ளலாம். மேலும், உடல் முழுவதும் பூசிக்கொள்ளலாம். நாளடைவில் சருமம் ஜொலிஜொலிப்பாக மாறும் .இதனை தொடர்ந்து பயன்படுத்தவேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க


Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related