தயாரிப்பாளர்களை கலங்க வைக்க கூடிய வகையில் வெளிநாட்டிற்கு கதை விவாதம் லொக்கேஷன் செல்லும் இக்காலப்படங்களில் எதுவும் இல்லாமல் சிவாஜி 15நாட்களில் நடித்து தயாரிக்கபட்டப்படம்தான் பலேபாண்டியா அமெரிக்காவிலிருந்து ஜான் எப் கென்னடியால் 1962ம் ஆண்டு சிவாஜிகணேசனை இந்தியாவின் கலாச்சார தூதராக அழைக்கப்பட்டார் இதுவே இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற முதல் கலைஞர் என்ற பெருமை சிவாஜிக்கு உண்டு மேலும் கௌரவமேயராக நியூயார்க்கின் நயாகராநகரில் நியமிக்கப்பட்டார்.

இவருக்குமுன் ஜவகர்லால்நேரு இந்தியாவிலிருந்து நயாகரா நகரில் கௌரவமேயர் என்ற பெருமையை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பலேபாண்டியா திரைப்படம் அமெரிக்காவிற்கு செல்லும் முன்பாகவே ஒப்பந்தம் ஆகிவிட்டது 1962ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி படபிடிப்பு நிலையத்திற்கு வந்தார் ஸ்டியோவில் தங்கியிருந்து 11நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடித்து முடித்து கொடுத்தார் இதில் எம் ஆர் ராதா இரட்டை வேடங்களிலும் சிவாஜிகணேசன் 3வேடங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது என்று அப்படத்தின் இயக்குநர் பி ஆர் பந்துலு கூறியிருந்தார்.
பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பும் தனுஷின் ‘வாத்தி'..! முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?
இயக்குநர் பி ஆர் பந்துலு விறுவிருப்பாக மூன்று இடங்களில் ஒரே கட்டத்தில் பலேபாண்டியா எனும் சூப்பர் நகைச்சுவை திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்தார் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்தாலும் 11நாட்கள் மட்டும்தான் அவருடைய கால்சீட் ஆகும் இப்படத்தில் நடித்தின்மூலம் மிகக்குறுகிய காலங்களில்
முழுப்படத்தையும் நடித்து முடித்தவர் என்ற பெருமையான சாதனையை படைத்தார் நடிகர்திலகம் சிவாஜிகணேசன்
இலக்கிய ரசனையுடன் எழுதிய அத்திக்காய் பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார் இப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் மிகவும் பேசப்பட்டு வெற்றிபெற்றது படமும் மிகவும் சூப்பர் ஹிட்டானது.

நீயே எனக்கு நிகரானவன் என்ற பாடல் சிவாஜிக்கும் எம் ஆர் ராதாவிற்கும் இடையிலான நடிப்பில் இன்னும் ரசிக்க கூடியதாக உள்ளது தன்னம்பிகை ஏற்படுத்த கூடிய வகையில் வாழநினைத்தால் வாழலாம் என்ற பாடல் மிக சிறப்பாக உள்ளது
இசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி கண்ணதாசன் பந்துலு சிவாஜி இவர்கள் கூட்டணி அமைந்துவிட்டால் பெயருக்கோ பாட்டுக்கோ பஞ்சமிருக்காது இதுவே சிவாஜிக்கு சிவாஜி என்ற மகா நடிகன் என்றுமே அவருக்கு நிகரானவர் ஆவார்
திருச்செந்தூரில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்