நாகை: ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியை நாகையில் கூட்டணி கட்சியான திமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் கட்சி மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வை பின்னுக்குத் தள்ளி, திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி தொடக்க முதலே முன்னிலை வகித்து

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றது இதனை கொண்டாடும் விதமாக
திமுகவினர் தமிழக முழுவதும் வெடி, வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விடியோவை பாருங்க: சந்திரமுகி 2 படத்தை தொடர்ந்து ஈரம் பட கூட்டணியில் இணைந்த லட்சுமி மேனன்!

அதன் ஒரு பகுதியாக நாகையில் இன்று திமுகவினர் ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக நாகை பேருந்து நிலையத்தில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற கொண்டாட்டத்தில், நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில் வந்த திரளான திமுகவினர் பட்டாசு வெடித்து, அங்கிருந்த பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : கீழ்வேளூர் 4வது வார்டில் தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு 300 பயனாளிகளுக்கு தென்னங்கன்று