தமிழ் நாடுEntertainmentBiographyActressஷார்ட் பைட்ஸ்இன்றைய செய்திகள்Videosபொழுதுபோக்குஅரசியல்உணவு & உடல் நலம்How toFashionLawLifestyleTamil Talk TvNewsMovieகுற்றம்Gadgetsவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்லைஃப்ஸ்டைல்EDUCATION-CAREERஆன்மீகம்சினிமா செய்திகள்குழந்தை பராமரிப்புஅழகு குறிப்புகள்வீட்டுக் குறிப்புகள்ExamTelevisionBusinessதொழில்நுட்பம்தமிழ்நாடு உலாSportsTop Info TamilUPDATESAppசுவாரஸ்ய தகவல்கள்கதைகள்ஆட்டோமொபைல்கார் ரிவியூஸ்பைக் ரிவியூஸ்ஆட்டோமொபைல் டிப்ஸ்டிரெண்டிங்வாகன செய்திகள்இன்ஸ்ட்டாகிராம் டிரெண்ட்ஸ்ActorKollyBugzடிவிட்டர் டிரெண்ட்ஸ்தலங்கள்உலகம்WP-TutorialsEnglishமகப்பேறும் மறுபிறப்பும்சின்னத்திரைதிரைவிமர்சனம்நடிகைகள்சுற்றுலாஉலகம் சுற்றலாம்கேரள சொர்க்கம்இந்திய பொக்கிஷங்கள்ஜோதிடம்மாத ராசிபலன்பரிகார பூஜைகள்ராசிபலன்வானிலைஇந்நாளில்இந்தியா
spot_img
spot_img

குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு 

தேர்வுநிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்

மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் பேருந்து நிலையத்தில் ரூபாய் 22 லட்சம் செலவில் நடைபெற்று வரும் கழிப்பறை பணி,ரூபாய் 75 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி,வளம் மீட்பு பூங்காவில் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணி, குத்தாலம் அரசு மருத்துவமனை ஆய்வு பேரூராட்சி பகுதியில் வீடுகளில் தூய்மை பணியாளர் மூலம் குப்பைகள் சேகரிக்கும் பணி ஆய்வு போன்ற அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு பின் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நான் ஆய்வு மேற்கொண்டேன்.குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி பேருந்து நிலையத்தில் 15 வது மானிய குழு திட்டத்தில் ரூபாய் 22 லட்சம் செலவில் நடைபெற்று வரும் கட்டண கழிப்பறை பணிகளை ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமாக முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 75 லட்சம் செலவில் புது நகர்,காளியம்மன் கோவில் தெரு,ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணியினை நேரில் ஆய்வு மேற்கொண்டேன்.

பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் வீட்டிற்கு சென்று தூய்மை பணியாளர் மூலம் சேகரிக்கும் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிக்கும் தோப்பு தெருவில் நேரில் ஆய்வு மேற்கொண்டேன்.

தொடர்ந்து குத்தாலம் அரசு மருத்துவமனையில் தாய் சேய் உள் நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு,புற நோயாளிகள் பிரிவு,அறிவை அரங்கம் மருந்து பிரிவு போன்ற பிரிவுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டேன்.

பின்னர் குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ரூபாய் 40 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட துணிப்பை விற்பனை இயந்திரத்தை திறந்து வைத்தேன்.பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களையும் வளர்ச்சி பணிகளையும் குறித்து அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன்,பேரூராட்சி துணைத் தலைவர் சம்சுதீன்,பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித்,பொறியாளர் சுப்பிரமணி,இளநிலை உதவியாளர் சுந்தர், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

READ  உலக தண்ணீர் தினம்-2023 முன்னிட்டு உள்நாட்டு மீன் வளர்ப்பு சிறுகுறு விவசாயிகளுக்கு pH மீட்டர் கருவி வழங்கும் நிகழ்ச்சி

Share post:

Popular