ஆடி அமாவாசை விரதம்: அமாவாசை விரத முறை தை அமாவாசைக்கு மட்டுமல்ல, மற்ற மாதங்களில் அமாவாசை நாட்களிலும் இருக்க வேண்டிய விரத முறைகளுக்கும் பொருந்தும். ஆடி அமாவாசை ,தை அமாவாசை, மகாளய அமாவாசை மிகவும் விசேஷமாக கொண்டாடுவார்கள், இந்த அமாவாசை மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

இந்த அமாவாசை விரதத்தை யார் யார் இருக்கலாம், இருக்க வேண்டும்?
- தந்தை,தாய் இல்லாத ஆண்கள் அமாவாசை விரதம் மேற்கொள்ள வேண்டும்.
- கணவனை இழந்த பெண்கள் இந்த விரத்தினை மேற்கொள்ளவேண்டும்.
பெண்கள் அமாவாசை விரதம் இருக்கும் முறை:
திருமணம் ஆன பெண்டிர்க்கு தந்தை, தாய் இல்லை என்றாலோ, இருவரும் இல்லை என்றாலோ அவர்கள் விரதம் இருக்க கூடாது.
ஆண்கள் அமாவாசை விரதம் எடுப்பது எப்படி?
ஒரு ஆண் தந்தை, தாய் இல்லை என்றாலும் அல்லது இரண்டு பேர்களும் இல்லை என்றாலும் அவர்கள் கட்டாயம் அமாவாசை விரதம் எடுக்கவேண்டும். தர்பணமும் தர வேண்டும். அமாவாசை நாளில் உபவாசம் இருக்கவேண்டும். கண்டிப்பாக தண்ணீர் மற்றும் எள் இரைத்து முன்னோர்களை வழிபடவும்.
அமாவாசை நாளில் கோயிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும் . முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள் அல்லது பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள். அமாவாசை அன்று பெண்கள் நன்றாக சாப்பிட்டுவிட்டு பிறகு விரத்திற்கு உண்டான உணவுகளை சமைக்க வேண்டும். புருஷன்தான் விரதம் இருக்க வேண்டும். பெண்கள் விரதம் எடுக்க கூடாது. ஒரு கை பிடி அளவுவாவது அன்னத்தை இரவு உணவில் சேர்த்து சாப்பிடுவது பெண்களுக்கு பூரண ஆசி கிடைக்கும்.
அமாவாசைவிரத பலன்கள் :
தாய், தந்தைகளை யாரெல்லாம் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்