மயிலாடுதுறை மாவட்டம்
வீட்டு வரி முதல் மின் கட்டண உயர்வு வரை விலையேற்றம் செய்த தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

வீட்டு வரி முதல் மின் கட்டண உயர்வு வரை மக்களை வாட்டி வதைக்கும் வகையில் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அவைத்தலைவருமான பாரதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அதிமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலையை பட்டியலிட்டும் தற்போது உள்ள திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டியும், கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, வீட்டு வரி குடிநீர்வரி, கழிவு நீர் இணைப்பு கட்டண ம் உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும் விலைவாசி உயர்வுக்கு காரணமான தமிழக அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன் சக்தி முன்னாள் மாவட்ட செயலாளர் விஜிகே செந்தில்நாதன் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.