சென்னை குரோம்பேட்டை துர்கா நகர், பச்சை மலை பகுதியை சேர்ந்தவர் விஜய்(எ) மாரி(20), இவர் அதே பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போலீசார் ஒலி பெருக்கி மூலம் கீழே இறங்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் கீழே இறங்காமல் சுமார் ஒன்றரை மணி நேரம் மேலேயே இருந்ததால் தாம்பரம் தீயணைப்பு துறையினர் வந்து மேலே ஏறி மீட்டனர்.
கீழே இறங்கி வந்த போது தீயணைப்பு துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு குதித்து தப்பி ஓடி விட்டார் பொது மக்கள் விரட்டி பிடித்து தர்மடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் விஜய் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்பதும் ஏரியாவில் போக்கிரி தனமாய் சுற்றித் திரிந்து பெவிக்குவிக், தின்னர் போன்ற பொருட்களை வைத்து போதை ஏற்றிக் கொண்டு இருந்தவர், வீட்டை விற்று பணம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 2 மணி நேரம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதே மின் கோபுரத்தில் காலை கிஷோர் என்பவர் காதல் விவகாரத்தில் திருமணம் செய்து வைக்க கோரி ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து சிறை சென்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.