சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை ஒட்டி தமிழக அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற 152 மாணவர்களை சிறப்பு விமான மூலம் சென்னையில் இருந்து பெங்களூர் வரை அழைத்துச் சென்றனர்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஒட்டி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் சதுரங்க போட்டி குறித்து விழிப்புணர்வும், ஆர்வத்தையும் ஏற்படுத்த பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டம் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்று விளையாடி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைக் காணவும், சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாடவும் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகள் 1 – 5 வகுப்புகள், 6 – 8 வகுப்புகள், 9 -10 வகுப்புகள், 11 – 12 வகுப்புகள் என 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன.
இதையடுத்து சதுரங்கப்போட்டியில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வெற்றிபெற்ற 152 மாணவர்கள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை விமானநிலையம் அழைத்துவரப்பட்டு சிறப்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து பெங்களூர் அழைத்து சென்றனர்.இந்த விமான மாலை 4.30 மணியளவில் மீண்டும் சென்னை விமானநிலையத்திற்க்கு வந்து சேரும்.
விமானத்தில் செல்லும் மாணவ,மாணவிகள் விமானத்தினுள் சிறப்பு சதுரங்கப் போட்டி விளையாடிக் கொண்டே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு அமைச்சர்கள் விருது வழங்க உள்ளனர்.
முன்னதாக பள்ளி மவணவர்கள் செல்லும் சிறப்பு விமானத்தை சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.